கமுதி அருகே பெண் கொலை :

கமுதி அருகே ஏனாதியைச் சேர்ந்தவர் மாடசாமி (32). இவரது மனைவி ராதிகா (28). இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாடசாமி அடிக்கடி தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, பேரையூர் காவல் நிலையத்தில் மாடசாமி சரண் அடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE