திண்டுக்கல் அருகே இளைஞர் கொலை : தலை, உடல் தனித்தனியே மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஆண் ஒருவரின் தலை அறுபட்டு கிடந்தது. இதுகுறித்து அந்த வழியே சென்றவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலையானவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்(38) என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலையானவரின் உடலைத் தேடினர். அனுமந்தராயன்கோட்டை அருகே வட்டப்பாறையில் பெட்ரோல் பங்க் அருகே கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீஸார் அங்கு சென்று உடலை கைப்பற்றினர்.

ஸ்டீபன் கொலையானதற்கு காரணம் என்ன, கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்