சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 77 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 28 பேர், வட்டாரப் பகுதிகளில் மகுடஞ்சாவடியில் 13, சங்ககிரியில் 9, எடப்பாடியில் 6, தாரமங்கலம், வீரபாண்டியில் தலா 5, நங்கவள்ளியில் 4, கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 3, கெங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டியில் தலா 2, மேட்டூர் நகராட்சியில் 4 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 98 பேர் பாதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago