மரக்கன்றுகள் நடும் விழா :

மேலப்பாளையம் காட்டுப்புது தெரு பூங்காவில் மேலப்பாளையம் வெல்பர் கமிட்டி , பசுமை மேலப்பாளையம் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு பராமரிப்பு சங்கம், 34-வது வார்டு பைத்துல்மால்கள் சார்பில் மாநகராட்சியின் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மேலப்பாளையம் மண்டல பொறியாளர் லெனின் தொடங்கி வைத்தார். மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் அமீது, பொறியாளர் பிலிப் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சங்கத் தலைவர் அப்துல் முத்தலிப், பேராசிரியர் யூனுஸ், பசுமை மேலப்பாளையம் செயலாளர் பக்கீர் முகமது லெப்பை , பசுமை மேலப்பாளையம் குழு அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்