இலவச வீட்டுமனை வழங்கக்கோரி : கிருஷ்ணகிரியில் திருநங்கைகள் தர்ணா :

பாஞ்சாலியூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து சுமார் 30 திருநங்கைகள் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும், பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களை ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சமாதானம் செய்து வைத்து, கோரிக்கை மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE