பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் கோடீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பட் டாசு ஆலை உள்ளது.

இது மத்திய அரசு துறையின் அனுமதிபெற்று இயங்குகிறது.

இந்த ஆலையில் 20 அறைக ளில் 50-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் நேற்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச்சிதறின. இதில் அந்த அறை இடிந்து விழுந்தது. அங்கு பணிபுரிந்த மாரனேரி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி(70) என் பவர் இறந்தார்.

சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சார்-ஆட்சியர் பிருத்விராஜ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியர் ஜீவஜோதி, வட்டாட்சியர் ராஜேஷ்குமார், டிஎஸ்பி பாபு பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE