வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் தாமஸ் நகர்பகுதியைச் சேர்ந்தவர் பெரியமாடத்தி. இவர், வீட்டில் சமையல்செய்துகொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இவரது மகள் மாரி (38) முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE