கட்டிடங்களின் உயரம் 15 மீட்டருக்குக் குறைவாக இருந்தால், கள ஆய்வின்றி மின்இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின்வாரியத்தின் வணிகப் பிரிவின் தலைமைப் பொறியாளர் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, மின்இணைப்புக் கோரும் கட்டிடத்தின் உயரம் 15 மீட்டர் அல்லது குறைவாக இருந்து விதிமீறல் ஏதும் இல்லாமல் இருந்தால், நேரில் சென்று களஆய்வு நடத்தத் தேவையில்லை என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago