கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரத்து 808 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 12 ஆயிரத்து 112 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் 74.07 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 73.61 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 35.88 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago