தாரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாரமங்கலம் அடுத்த ஆரூர்பட்டி மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார் (34). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக தாரமங்கலம் போலீஸார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago