டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு :

திருச்செங்கோடு அடுத்த போக்கம்பாளையம் கிராமம் தீர்த்தங்காடு பகுதியில் டாஸ்மாக்மதுபானக் கடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தீர்த்தங்காடு கிராம மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடை அமையவுள்ள சாலையை செட்டிசாலப்பாளையம், போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், சித்தாளந்தூர், குமாரமங்கலம் , 87 கவுண்டம்பாளையம், பாரிநகர், காந்திநகர், திருமலாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். எனவே மதுபானக் கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் டாஸ்மாக் மதுபானக் கடை அமையாது. அச்சப்பட வேண்டாம் என எம்எல்ஏ ஈஸ்வரன் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE