வன பரப்பை அதிகரிக்க கடலூரில் அதிகாரிகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கடலூரில் வனத்துறை சார்பில் கடலூர் மாவட்ட பசுமை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங், மாவட்ட வன அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவிலான வன பரப்பை 33 சதவீதம் அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும் மர வளர்ப்பில் மாநில அரசின் கொள்கை படி அனைத்து அரசுத் துறைகளை பங்கேற்க வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொது நிலங்களில் மரம் வெட்ட பசுமைக்குழு அனுமதி பெற வேண்டும், மரம் நடுவதற்கு ஆண்டு செயல் திட்டம் தயார் செய்திட அனைத்து துறைகளும் விவரம் தர வேண்டும், அனைத்து துறைகளும் மரம் நடுவதற்கு மகளிர் குழுக்கள் தொண்டு நிறுவனம், என்எஸ்எஸ் மாணவர்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மர வளர்ப்பு நிதியம் ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்