குடிநீர் கேட்டு மக்கள் மறியல் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோடாலி கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு மக்களுக்கு சுமார் 5 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கதாததால், நேற்று காலிக்குடங்களுடன் அணைக்கரை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீஸார் சமாதானப் படுத்தியதால் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்