வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - 17 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல் :

By செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர்கள் நேற்று வழங்கி கவுரவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் கற்பித்தலில் சாதனைப்படைக்கும் ஆசிரியர்களுக்கு, டாக்டர்.ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 27 ஆசிரியர்கள் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து, திருமணி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், செம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலன், கல்வி உலகம் சிவானந்தம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவவடிவு, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயந்தி, வேலூர் கஸ்பா நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பிரஜெட், குடியாத்தம் பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கார்த்தி, வேலூர் ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சக்திவேல், அணைக்கட்டு மருதவல்லி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிச்செல்வி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி முதல்வர் சரவணன் ஆகிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, கேத்தாண்டப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், கசிநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜனார்த்தனன், புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செலினா, பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பிரதீப், மேல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கஜலட்சுமி, சிந்தாமணிபெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருண்குமார், சின்ன வெங்காயப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை செண்பகவள்ளி, ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன் ஆகிய 8 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE