குற்றாலத்தில் - அதிமுக ஆலோசனைக் கூட்டம் :

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “ அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக அரசுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சியில் 3 மாதத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அவை விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மக்கள் விழித்துவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மகளிரணி மாவட்டச் செயலாளர் சந்திரகலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்