திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்து ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு: தேவநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.வயநமசி, நத்தம் கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் குருபிரசாத், அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி பயிற்றுநர் முபாரக் சாதிக் அலிகான், கோட்டுர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கந்தவேல், ம.மூ.கோவிலூர் சி.எஸ்.எம்.பா. மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சந்திரசேகரன், பழைய வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் முருகேஸ்வரி, ரெங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இந்துமதி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவள்ளி, வடகவுஞ்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராஜ், சாலைப்புதூர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சரஸ்வதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE