அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தொழிலாளர் நல வாரியத்தை காக்க வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கரூர் மாவட்ட உழைக்கும் மக்கள் சாசனம் ஆகியவற்றின் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடைபெற்றது.

மத்திய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை கைவிட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். நலவாரியங்களில் தொழிற்சங்கங்கள் மூலம் நேரடி பதிவு புதுப்பித்தல், இஎஸ்ஐ வீட்டுவசதி, இடம்பெயரும் தொழிலாளர் கட்டாயப்பதிவு அமல் படுத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE