கிருஷ்ண ஜெயந்தி விழா :

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சேநேயர் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்தார். தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நத்தம் கோவில்பட்டியில் பாமாருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமேசுவரம் ராமர் தீர்த்தம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில், மதுரை திருப்பாலை பலராமர் கோயில், மணிநகரம் இஸ்கான் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்