செப். 1-ல் 13 மதுக்கடைகளை மூட உத்தரவு :

By செய்திப்பிரிவு

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். சட்டம், ஒழுங்கு பராமரிப்பை மேற்கொள்ளும் வகையில் வரும் 1-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதியைச் சுற்றியுள்ள 13 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலை, ரயில்வே பீடர் சாலை, சுரண்டை சாலை, தெற்கு ரத வீதி, ராஜபாளையம் சாலை, ரத்தினபுரி நவா சாலை, புளியங்குடி பம்புக்கோவில் சந்தை ரோடு, டி.என்.புதுக்குடி, வாசுதேவநல்லூர், தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 13 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்