உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி 25 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் :

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். தொடர்ந்து கரோனா தொற்று காலத்தில் ரத்த தானம் அளித்த 25 தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 100-வது முறையாக ரத்த தானம் அளித்த எர்ணாபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரனுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்து.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் அன்புமலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்