அனுமதியின்றி 27 மரங்களை வெட்டியவர் கைது :

அனுமதியின்றி 27 மரங்களை வெட்டிய நபரை குமாரபாளையம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் பொது இடத்தில் இருந்த 27 மரங்கள் ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. தகவல் அறிந்த விஏஓ முருகன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுந்தரமூர்த்தி (41) என்பவர் மரங்களை வெட்டியது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மேலும், மரங்களை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE