மாநில நல்லாசிரியர் விருதுக்கு 37 பேர் விண்ணப்பம் :

By செய்திப்பிரிவு

மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, ஆக.20-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: மாவட்டத்தில் இருந்து 37 பேர் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிக்கு 5 பேர், தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 5 பேர் மற்றும் மெட்ரிக் பள்ளிக்கு ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு விருது அளிக்கப்படும். அரசு உத்தரவுப்படி ஒரு விருதுக்கு 2 பேர் வீதம் மொத்தம் 22 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE