காந்திகிராம பல்கலைக்கு பொறுப்பு துணைவேந்தர் :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் துணைவேந் தராக எஸ்.மாதேஸ்வரன் பணிபுரிந்து வந்தார். இவர் பொறுப்பேற்று சில மாதங்களே ஆனநிலையில், சொந்தப் பணி காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அவர் முறைப்படி தகவல் தெரிவித்தார். இதையடுத்து காந்தி கிராம கிராமியப் பல்கலை. வேந்தர் கே.எம்.அண்ணாமலை, பல் கலை.யின் மூத்த பேராசிரியர் டி.டி.ரெங்கநாதன் என்பவரை பொறுப்பு துணைவேந்தராக நியமித்துள்ளார். இவர் நேற்று மாலை துணை வேந்தராகப் பொறுப்பேற்றார். டி.டி.ரெங்க நாதன் வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்