எஸ்எம்ஏ பள்ளியில் பட்டிமன்றம் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு இணைய வழியில் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

‘‘தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படுவது நன்மைகளா?, தீமை களா?’’ என்ற தலைப்பில் பட்டிமன் றம் நடைபெற்றது. நடுவராக மாணவர் துரை நரேந்திரன் பங்கேற்றார். பள்ளி அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி, ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE