தலைமறைவாக இருந்தவர் கைது :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, பழைய பேட்டையைச் சேர்ந்தவர் பேச்சி (34). இவர், மீது தென்காசி காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பேச்சி, ஜாமீனில் வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE