மேலும் 7 கரித்தொட்டி ஆலைகளுக்கு ‘சீல்' :

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்துவதாகக் கூறி, காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியில் உள்ள 4 கரித்தொட்டி ஆலைகளில் மொத்தம் 40 குழிகள், ஊதியூர் அருகே வட்டமலை-அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள ஆலையில் 9 குழிகள், முதலிபாளையம்-ஊதியூர் பகுதியில் உள்ள ஆலையில் 6 குழிகள், நிழலி-ஊதியூரில் உள்ள ஆலையில் 4 குழிகள் என மொத்தம் 7 கரித்தொட்டி ஆலைகளில் செயல்பட்டு வந்த 59 கரித்தொட்டிக் குழிகள் மூடப்பட்டன.

இந்த நடவடிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதி ராகவன், உதவிப் பொறியாளர் சத்யன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE