நாமக்கல் மண்டலத்தில் 30 காசு சரிந்துமுட்டை விலை 420 காசுகளாக நிர்ணயம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைத்து 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டலக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 450 காசுகளாக இருந்த முட்டை விலை 30 காசுகள் குறைத்து 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக முட்டை விலையில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர். வட மாநிலத்தில் ஸ்வராவன் எனும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால், முட்டை நுகர்வு குறைந்ததால் பிற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது, என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் 380, விஜயவாடா 405, ஹொஸ்பேட் 390, பர்வாலா 385, பெங்களூரு 430, சென்னை 460, டெல்லி 405, மும்பை 440, மைசூர் 430, கொல்கத்தா 465 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.99 என பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 என பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE