புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல் விவரம்:
புதுச்சேரி மாநிலத்தில் 5,924 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-70, காரைக்கால்-22, ஏனாம்-2, மாஹே-20 என 114 பேருக்கு (1.92 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 205 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 661 பேரும் என மொத்தமாக 866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,801 உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 213 (97.81 சதவீதம்) ஆக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.