விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு :

சங்கரன்கோவிலில் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் மகா சபை (சிஐடியு) கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வை அமல்படுத்த, கூடுதல் சேலைகள் உற்பத்தி செய்து தருமாறு கேட்கும் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் செயலை கண்டித் தும், கூலி உயர்வு முத்தரப்பு ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தியும், வரும் 16-ம் தேதி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, சங்கரன்கோவிலில் சாலை மறியல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்