போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது :

கரூர் அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கே.பி.தாளியாபட் டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், வள்ளி தம்பதியின் மகன் ராஜேந்திரன்(19). இவருக்கும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை வட்டார சமூக நல அலுவலர் சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸார், ராஜேந்திரன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்