உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின்படி தென்காசி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சி உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களுக்கான வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல், மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிபிரிவு), தென்காசி மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வெளியிடப்படுகிறது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை பெறும் பொருட்டு நாளை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்