தி.மலை கோயில்களில் தரிசனத்துக்கு தடை நீட்டிப்பு :

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும் 8-ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை வரும் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்துக்கு தடை இருக்கும் காலங்களில் ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்களை அர்ச்சகர்கள், கோயில் நிர்0வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்