சுகாதாரப் பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி :

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார நலப் பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 31 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழக அரசால் 3 தவணைகளாக இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கட்ரங்கன், சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் அருணா, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநராக பொறுப்பேற்ற வெங்கட்ரங்கனுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், குடும்பநல துணை இயக்குநர் ராமநாதன், உறைவிட மருத்துவர் அகத்தியன், மருத்துவர்கள் லதா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE