தேசிய திறனாய்வு தேர்வில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு :

By செய்திப்பிரிவு

செங்கோட்டை நுாலகத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 2 மாதமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 8 மாணவர்கள் வெற்றி பெற்றனா். இவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட நுாலக அலுவலா் மீனாட்சிசுந்தரம், வாசகா் வட்ட துணைத் தலைவா் ஆதிமூலம், இணைச் செயலாளா் செண்பக குற்றாலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா். நுாலகா் ராமசாமி வரவேற்றார். கடையநல்லுார் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பரிசுகளை வழங்கினார். வாசகர் வட்ட பொருளாளா் பா.சுதாகா் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE