குமரி மாவட்டத்தில் குறையும் கரோனா பாதிப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 26 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். 312 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 29 பேர் குணமடைந்தனர். 2 பேர் உயிரி ழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு ள்ளது. 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கரோனாவுக்கு மொத்தம் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இருவர் மரணமடைந்தனர். 377 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா விதிமுறைகளை மீறியதற்காக இதுவரை 2 கோடியே 15 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்