குறிஞ்சிப்பாடியில் ஒரு மாதத்தில் 410 டன் எள் விற்பனை :

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்த சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொது முடக்கத்துக்கு பின்னர் ஜூன் 7-ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை கூடத்தில் ரூ. 3 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள, 410 மெட்ரிக்டன் எள் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். தற்போது 80 கிலோ கொண்ட எள் மூட்டை தரத்துக்கு ஏற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விருதுநகர், வெள்ளக்கோவில், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி போன்ற வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்