‘நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' :

தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சுரேஷ்குமார் உள்ளிட்ட விவசாயிகள் அளித்துள்ள மனுவில், “தண்டராம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது கிடையாது. வியாபாரிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE