ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி - 3 குழந்தைகள் மரணம் :

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர், ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் யுவன் (4), பூபாலன் மகள் சண்முகப்பிரியா (5), கண்ணன் மகன் இஷாந்த் (5) ஆகிய 3 பேரும் உறவினர்கள். நேற்று மாலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அருகில் உள்ள குளத்துக்கு சென்று நீரில் இறங்கி விளையாடியுள்ளனர்.

அப்போது, திடீரென்று மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று மூன்று குழந்தைகளையும் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர்.

மற்றொரு சம்பவம்

தென்காசி மாவட்டம் மாறாந்தையைச் சேர்ந்த சுரேஷ் மகன் சு.மதன் (7). தனது பாட்டியுடன் மாடு மேய்ப்பதற்காக சென்றான். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தான். தண்ணீரில் மூழ்கி இறந்த அவனது உடலை கைப்பற்றி ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்