வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணியின் உத்தரவின் பேரில்சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் வடலூர்அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் வண்டியை ஓட்டி வந்தவர்கள் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(21), மேட்டுக் குப்பம் வெங்க டேசன்(40) என்றும் தெரியவந்தது. அவர்கள் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வருவதும் தெரிய வந்தது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும், மாடுகளையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago