கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள் :

கடலூர் துறைமுகத்தில் மீன்வாங்குவதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் குவிந்தனர்.

கடலூர் துறைமுகத்தில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை வாங்க நேற்று குவிந்தனர். பலரும் போட்டி போட்டு ஏலம் எடுத்து மீன்களை வாங்கி சென்றனர்.

கடலூரில் உள்ள மீன் மார்க்கெட்களிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். இறைச்சிக் கடைகளிலும் மக்கள் குவிந்தனர். இறைச்சி கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து இறைச்சி வாங்கி சென்றனர். ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்தனர். இதில் ஒரு சிலர் முகக்கவசம் அணியாமல் மீன்களை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்