கம்யூ. கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் :

தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்டச் செயலாளர் இசக்கித்துரை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள் சிங், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டியன், சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் அயூப்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 28 ,29, 30 ஆகிய மூன்று நாட்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தென்காசி மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஜூன் 28-ம் தேதி தென்காசி, சிவகிரி, திருவேங்கடம், ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 29-ம் தேதி செங்கோட்டை, கடையநல்லூர், கீழப்பாவூர், புளியங்குடியிலும், ஜூன் 30-ம் தேதி சங்கரன்கோவில், ராயகிரி, கடையம், சுரண்டை ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்