நெல் விதைகள் இருப்பு : நெல்லை வேளாண் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் கார் சாகுபடி செய்து வருகிறார்கள். அதற்கு தேவையான விதைகள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வேளாண்மைத் துறையின் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அம்பை-16, டிபிஎஸ் 5 மற்றும் ஏடிடி 45 விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE