ஒரு கிலோ கஞ்சாவுடன் வியாபாரி கைது :

களம்பூர் அருகே விற்பனையில் ஈடுபட்டபோது ஒரு கிலோ கஞ்சா வுடன் வியாபாரி பிடிபட்டார்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள கைக்கனாதாங்கல் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார்(23). இவர், அதே கிராமத்தில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறை யினர், ராஜ்குமாரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் சிறிய பொட்டலங் களாக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.7,290 இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கஞ்சா வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.7,290 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE