வயலில் கிடந்த குழந்தை சடலம் மீட்பு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வயலில் நாய் கடித்து குதறிய நிலையில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தை சடலம் கிடந்தது. தகவலறிந்த மங்களமேடு போலீஸார் குழந் தையின் சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை அங்கு வந்து போட்டது யார்? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE