பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன் பேசினார். மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் கமலக்கண்ணன், செல்வம், ஆனந்தன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE