டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு; பாமக ஆர்ப்பாட்டம் :

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை வகித்தார். இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் தங்கராசு, ‌ஒன்றியச் செயலாளர் பாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE