கடையநல்லூரில் எம்எல்ஏ ஆய்வு :

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் கிருஷ்ண முரளி எம்எல்ஏ ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் 10 ஆயிரம் முக கவசங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நாராயணன், மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE