சிவகங்கையில் - 4 பேருக்கு கருப்பு பூஞ்சை :

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கு கருப்புப் பூஞ்சை அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாவைப் போன்று கருப்புப் பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது கரோனாவால் பாதிக்கப்பட்டோர், எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை அதிகம் தாக்குகிறது. சிவகங்கை மாவட் டத்தில் சில தினங்களுக்கு முன்பு 4 பேருக்கு கருப்புப் பூஞ்சைக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதில் அவர்களுக்கு கருப் புப் பூஞ்சை இருப்பது தெரிய வந்தது. இதில் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறு கையில், சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி உள்ளது. இந்நோய்க்கு தேவையான மருத்துவ சிகிச்சை உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE