ரயில்வே ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

கரூர் ரயில்வே ஜங்ஷனில் இன்றும், நாளையும்(மே 5, 6) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் சுமார் 500 ரயில்வே ஊழியர்கள் உள்ளனர். இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் தடுப்பூசி போடும் பணி நிறைவடையாவிட்டால் 2-வது நாள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என கரூர் ரயில் நிலைய அதிகாரி ராஜராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE