திண்டுக்கல்லில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் :

கோடை வெப்பத்தைத் தணிக்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் வழங்குமாறு அதிமுக கட்சித் தலைமை அக்கட்சியினரை கேட்டுக்கொண்டது. இதையடுத்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். முதல்நாள் என்பதால் தண்ணீர் பந்தலில் திராட்சை, வாழை, ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பிரேம்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்